உத்திரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை காவலர் ஒருவர் தண்டால் எடுக்க வைத்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கனுஜ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை காவலர் தண்டால் எடுக்க வைத்துள்ளார். அந்த மாற்றுத்திறனாளி ரிச்சா ஓட்டும் தொழிலாளி ஆவார். இவர் தனது பயணிகளை வாகனத்தில் ஏற்றுவதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். காவலர் அவரை பின் மண்டையில் தாக்கி பின்னர் தண்டால் எடுக்க வற்புறுத்தியதாக கூறியுள்ளார் . இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இது குறித்து எஸ்.பி.அமரேந்திர பிரதாப் சிங் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார்.